பரிசுத்த பைபிள் தன்னை பரிசுத்த பைபிள் என்று அழைத்துக் கொள்கின்றதா?

Does the Holy Bible Call Itself the Holy Bible?

சாம் ஷமான்

குர்-ஆன் என்ற வார்த்தை தங்கள் பரிசுத்த வேதத்திற்கு பெயராக அனேக இடங்களில் குர்-ஆனில் காணப்படுகிறது, ஆனால், இதே போல ”பைபிள்” என்ற வார்த்தை, பைபிளுக்கு பெயராக பைபிளில் எங்கும் காணப்படுவதில்லை என்று முஸ்லிம்கள் வாதம் புரிகின்றனர். யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் வேதஎழுத்துக்களை குறிக்க “பைபிள்” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, எனவே, பைபிளில் ஒருவன் தேடினால், அதில் இந்த வார்த்தையை அவனால் காணவே முடியாது என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். இது மாத்திரமல்ல, தங்கள் வேத எழுத்துக்களை குறிக்கும் போது தாங்களே அதற்கு “பரிசுத்த” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மேற்கண்ட இஸ்லாமியர்களின் வாதங்களில் அனேக பிரச்சனைகள் அவர்களுக்கு எதிராகவே உள்ளது. முதலாவதாக, “பைபிள்” என்ற வார்த்தை பரிசுத்த பைபிளிலிருந்தே வந்துள்ளது என்பதாகும். இந்த வார்த்தை லத்தின் மொழியின் “பிப்ளியா” என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். மேலும் இந்த இலத்தின் வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகும். கிரேக்க மொழியில் “பிப்ளியன்” என்பது ஒருமையாகும், “பிப்ளியா” என்பது பன்மையாகும். இலத்தின் மொழியில் ”பிப்ளியா” என்பது பெண் பால் ஒருமையாகும்.

பைபிள் தொகுப்பை “ஒரு புத்தகம் (அ) பைபிள்” என்று அழைத்தார்கள். ஏனென்றால், பைபிளில் 66 தனித்தனி புத்தகங்கள் உள்ளன, ஆனால் ஆசிரியர் ஒருவரே, அவரே பரிசுத்த ஆவியாகிய ஆண்டவர் ஆவார்.

இப்போது இதைப் பற்றிய சில மேற்கொள்களை காண்போம், அதன் பிறகு பைபிளிலிருந்தே மேற்கோள்களை காண்போம்:

“The word ‘Bible’ COMES FROM THE GREEK BIBLOS or bublos, the inner bark enclosing the pitch of the papyrus plant from which paper (papyrus) was made in ancient times. The diminutive plural biblia (books) WAS VIEWED AS A SINGULAR IN LATIN, AND FROM THIS CAME THE MODERN ENGLISH WORD…” (Encyclopedia Americana, Year 2000 Edition, Volume 3, p. 648; bold and capital emphasis ours)

மேலும்:

“The term ‘Bible’ is derived, through the Latin Biblia (originally a neuter plural, but treated since the early Middle Ages AS A FEMININE SINGULAR), from the Greek ta Biblia, literally "the books," with the word hiera (sacred) expressed or understood. The singular of this Greek word, Biblion (a diminutive in form, but with the diminutive force lost), occurs in Lk 4.17, in reference to the "SCROLL" of Isaiah from which Jesus read in the synagogue at Nazareth. The earlier form he BiBlos (the book, i.e. the Bible), which occurs in 2 Mc 8.23, as does its plural hai BiBloi, in the Septuagint of Dn 9.2, comes from an original form, he BiBlos, designating Egyptian papyrus, first known to the Greeks as writing material imported from the Phoenician city of BYBLOS. Synonymous terms for the sacred book(s) are hai graphai (the writings, the Scriptures) and he graphe (the writing, Scripture, the Bible as a whole), which are used in Mt 21.42; 22:29; 26:54; etc. and Acts 8.32; Rom 4.3; 9.17; etc., respectively.

“The use of the singular number in these terms to designate the many writings that constitute the Bible comes FROM THE REGARDING OF THE COLLECTION AS A SINGLE UNIT, despite its many authors, HAS GOD AS ITS CHIEF AUTHOR…” (New Catholic Encyclopedia, Second Edition, Volume 2, p. 354; bold and capital emphasis ours)

இரண்டாவதாக, ஏற்கனவே குறிப்பிட்டது போல “பிப்ளோஸ், பிப்ளியன் மற்றும் பிப்ளியா” என்ற வார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை இப்போது காண்போம்:

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம்(biblion) அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை (to biblion) விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் (to biblion) சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. (லூக்கா 4:17-20)

இந்தப் புஸ்தகத்தில் (en to biblio touto) எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். (யோவான் 20:30)

சங்கீத புஸ்தகத்திலே (biblo): அவனுடைய வாசஸ்தலம் . . . என்றும் எழுதியிருக்கிறது. (அப்போஸ்தலர் நடபடிகள் 1:20)

. . . ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில்(en biblo ton propheton) எழுதியிருக்கிறதே. (அப்போஸ்தலர் நடபடிகள் 7:43)

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில்(en to biblio tou nomou) எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. (கலாத்தியர் 3:10)

துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும் (kai ta biblia), விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. (2 தீமோத்தேயு 4:12)

கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில்(graphon eis biblion) எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. (வெளிப்படுத்தின விசேஷம் 1: 10-11)

இந்தப் புஸ்தகத்திலுள்ள (tes propheteias tou bibliou) தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில்(en tou biblio) எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின்(tou bibliou tes propheteias) வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதப்பட்டவைகளிலிருந்தும் , அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். (வெளிப்படுத்தின விசேஷம் 22: 18-19)

மூன்றாவதாக, பைபிள் தன்னை ”பரிசுத்தம்” என்று அழைக்கிறது:

இயேசுகிறிஸ்துவைக் குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், (ரோமர் 1:4)

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். (2 தீமோத்தேயு 3:14)

இதுமாத்திரமல்ல, ”புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள்” என்ற வார்த்தைகளும், பரிசுத்த பைபிளிலிருந்தே வந்தது. உதாரணத்திற்கு, “ஏற்பாடு – Testament” என்ற வார்த்தை, கிரேக்க மொழியின் diatheke என்ற வார்த்தையிலிருந்து வந்த இலத்தின் வார்த்தையாகும். இதே வார்த்தை தான் செப்டாஜிண்ட் மொழியாக்கத்தின் போது, ஏற்பாடு (brit) என்ற எபிரேய வார்த்தையை மொழியாக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.

கர்த்தர் ஒரு புதிய உடன்படிக்கையை (ஏற்பாட்டை) செய்தார் என்று வேதம் சொல்கிறது. அதன் நிறைவேறுதலாகத் தான் ”புதிய ஏற்பாடு பரிசுத்த எழுத்துக்கள்” இருக்கின்றன.

இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்திஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுககும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. (எபிரேயர் 8:6-13)

ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை. எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளிள்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். (எபிரேயர் 9:15-21)

போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். (லூக்கா 22:20)

பவுல் அவர்கள் பழைய ஏற்பாட்டின் எபிரேய வேத எழுத்துக்களை கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறார், முக்கியமாக கற்களில் எழுதப்பட்டு இருந்த 10 கட்டளைகளை குறிப்பிடுகிறார்:

எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். (2 கொரிந்தியர் 3:7-16)

ஆக, பைபிள் தன்னை பரிசுத்த பைபிள் என்று மட்டும் சொல்லவில்லை, இன்னும் ஒரு படி மேலே சென்று பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்றும் பரிசுத்த எழுத்துக்களை பிரிக்கிறது காட்டுகிறது என்பதைம் இதன் மூலம அறியலாம்.

ஆங்கில மூலம்: Does the Holy Bible Call Itself the Holy Bible?

சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

பைபிள் பற்றிய இதர கட்டுரைகள்