101 காரணங்கள் 
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்?

பாகம் 5

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4ஐ படிக்க சொடுக்கவும்.  இந்த ஐந்தாம் பாகத்தில் 41வது காரணத்திலிருந்து 50வது காரணம் வரை காண்போம்.

41.  மரம் அழுததாம், இறைத்தூதர் ஆறுதல் சொன்னாராம்

முஹம்மது தம் மக்களுக்கு கட்டுக்கதைகளை அதிகமாக சொல்லியுள்ளார். ஒரு பேரிச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி முஹம்மது உரை நிகழ்த்தினாராம். அதன் பிறகு அதை விட்டுவிட்டு வெறு இடம் மாறி உரை நிகழ்த்தினாராம். அப்போது தன்னை முஹம்மது பயன்படுத்தவில்லை என்றுச்சொல்லி அந்த மரம் அழுததாம். அதனை ஆறுதல் படுத்த முஹம்மது அதனிடம் சென்று அதன் மீது கைவைத்து பரிவுடன் வருடினாராம். இப்படியெல்லாம் கட்டுக்கதைகளைச் சொன்னவர் முஹம்மது ஆவார்.  மரம் அழுமா? மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார் பாருங்கள்.  இது மட்டுமல்ல, இன்னும் அனேக கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளார் முஹம்மது. இப்படிப்பட்டவர் எப்படி உண்மையான தேவனின் உண்மை நபியாக இருக்கமுடியும்?[41]

42. தீய கனவுகள் கண்டால் இடப்பக்கத்தில் எச்சில் துப்புங்கள், அப்போது தீங்கு வராது

முஸ்லிம்களுக்கு தீய கனவுகள் வந்தால்,  தங்கள் இடப்பக்கத்தில் எச்சில் துப்பவேண்டுமாம், அதன் பிறகு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரவேண்டுமாம். அப்போது அவர்களுக்கு தீய கனவினால் எந்த ஒரு தீங்கும் வராதாம். எச்சில் துப்பினால், எப்படி தீய சக்திகள் செயலிழக்கும்? அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வது நல்லது தான். ஆனால், எச்சில் துப்புவது என்பது மூடப்பழக்கமாகும். கனவுகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், நல்ல கனவும் வரும் தீய கனவும் வரும். இடப்பக்கம் எச்சில் துப்பிவிட்டால் தீமை வராதா? இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளைச் சொல்லி மக்களை மயக்கிய முஹம்மது எப்படி நபியாக இருக்கமுடியும்? எப்படி மக்களை நல்வழிப்படுத்தும் தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இவர் மக்களை தன் கட்டுக்கதைகளால் மயக்கும் நபராக இருக்கிறார். இவரை நம்பினால், நாமும் நம் படுக்கையின் இடப்பக்கத்தை அவ்வப்போது எச்சிலால் நிரப்பவேண்டியது தான். [42]

43. வாயில் தண்ணீரை ஊற்றி மற்றவர்கள் முகத்தில் உமிழும் நபி

வாயில் தண்ணீரை ஊற்றி அதனை அப்படியே மற்றவர்கள் மீது உமிழ்வதை முஹம்மது செய்துள்ளார். மக்கள் தம்மை அதிகமாக மதிக்கிறார்கள் எனவே எதைச் செய்தாலும் அதனை ஆசீர்வாதமாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தில், இப்படி முஹம்மது மற்றவர்கள் மீது உமிழ்ந்து உள்ளார். இப்படி இவரிடமிருந்து எச்சில் தண்ணீர் உமிழப்பட்டால், அது ”பரக்கத்”  ஆசீர்வாதம் ஆகும் என்ற பொய்யை இவர் சொல்லியுள்ளார். மேலும் அவர் உளூ செய்தபின்னர் மீதமிருக்கும் தண்ணீருக்காக மக்கள் சண்டைப்போடுவதை இவர் தடுக்கவில்லை. தற்கால சாமியார்கள் எப்படியெல்லாம் பக்தர்களை கேவலப்படுத்துகிறார்களோ, தகாத செயல்களை செய்யச் சொல்கிறார்களோ,  அதே போல இவரும் நடந்துக்கொண்டுள்ளார். இப்படிப்பட்ட கீழ்தரமாக நடந்துக்கொண்டவரை கிறிஸ்தவர்கள் எப்படி நபி என்று நம்புவார்கள். உன்னத தேவகுமாரன் இயேசுக் கிறிஸ்து  பூமியில் இருக்கும் போது, சீடர்களின் கால்களைக் கழுவினார், தன் கால்கள் கழுவிய தண்ணீரை சீடர்களுக்கு குடிக்கக்கொடுக்கவில்லை. [43]

44. முஹம்மதுவின் சளி, நபித்தோழர்களுக்கு ஃபேர் அண்ட் லௌலி (Fair and Lovely)

முஹம்மது தன் தோழர்களை எந்த அளவிற்கு கீழ்தரமாக நடத்தியுள்ளார் என்று பாருங்கள். முஹம்மத்து சளியை துப்பினால், அதனை தன் தோழர்கள் கையில் பிடித்துக்கொண்டு, தங்கள் முகத்தில் ஃபேர் அண்ட் லௌலி போல தேய்த்துக்கொள்வார்களாம். தங்கள் உடலில் பூசிக்கொள்வார்களாம். இதனையெல்லாம் கண்டு உள்ளுக்குள் முஹம்மது மகிழ்ந்து இருந்திருப்பார். ஹதீஸ்கள் இப்படி முஹம்மதுவின் சளியை முகத்தில் பூசிக்கொள்வது அவரை கண்ணியப்படுத்துவது ஆகும் என்றுச் சொல்கிறது. அற்ப விஷயங்களுக்கெல்லாம் மக்களை கண்டிக்கும் இவர், இப்படி ஆரோக்கியமற்ற செயலைச் செய்யும் இவர்களை தடை செய்யக்கூடாதா? அய்யோ பரிதாபம், எவ்வளவு கீழ்தரமாக மக்கள் நடத்தப்பட்டுள்ளார்கள். மத விஷயத்தில் மக்கள் எவ்வளவு கீழ்தரமாக இறங்கிவிடுகின்றார்கள். எதற்கு எடுத்தாலும் குர்-ஆனில் விஞ்ஞானம் என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், முஹம்மதுவின் சளிப் பற்றி என்ன விஞ்ஞான அற்புதத்தைச் சொல்வார்கள்?   கர்த்தருக்கு நன்றிச் சொல்லவேண்டும், ஏனென்றால், பைபிளின் எந்த தீர்க்கதரிசியும் இப்படி மக்களை கீழ்தரமாக நடத்தவில்லை.  முஹம்மதுவை பின்பற்றினால், நாமும் இப்படி செய்யவேண்டி வரும் போல இருக்கிறது. நபித்தோழர்களுக்கு எங்கள்  பரிதாபங்கள் உரித்தாகுக. [44]

45. 50 வயது முதியவரின் கனவில், 6 வயது சிறுமியை மனைவியாக காட்டிய இறைவன்

முஹம்மது தமக்கு 50 வயதாகும் போது 6 வயது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் கனவில் ஒரு தூதன் ஆயிஷா அவர்களை பட்டுத்துணியினால் சுற்றி கொண்டுவந்தாராம், இவள் உங்கள் மனைவி என்றுச் சொன்னாராம். பட்டுத் துணியை விலக்கிப்பார்த்த போது,  அது ஆயிஷா என்று முஹம்மது கண்டுக்கொண்டாராம். இதனால் தான், அபூ பக்கரிடம் உங்கள் மகளை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று முஹம்மது கூறி, அபூ பக்கரை சமாதானப்படுத்தி திருமணம் செய்துக்கொண்டார். ஒரு கிழவனுக்கு ஒரு பேத்தி வயதில் இருக்கும் ஒரு சிறுமியை உண்மையான இறைவன் கனவில் காட்டுவானா? இது கேவலம் இல்லையா? உண்மையாகவே, அல்லாஹ் கனவில் காட்டினாலும், ஒரு நல்ல தீர்க்கதரிசி என்ன சொல்லவேண்டும்? எனக்கும் அந்த சிறுமிக்கும் இடையே 45 ஆண்டுகள் இடைவெளி உள்ளது, எனவே இப்படி திருமணம்செய்வது கீழ்தரமானது, என்னால் முடியாது என்றுச் சொல்லவேண்டாமா? சில ஆண்டுகளில் நான் மரித்துவிட்டால், இந்த சிறுமி விதவையாகிவிடுவாளே என்றுச் சொல்லி மறுத்து இருக்கவேண்டும். ஆனால், முஹம்மதுவோ ஆயிஷாவை 6 வயதிலே திருமணம் செய்துக்கொண்டு, ஆயிஷா அவர்களுக்கு 18 வயது ஆகும் போது மரித்தும் விட்டார். ஆயிஷா யாரையும் திருமணம் செய்துக்கொள்ளாமல், தன்னுடைய 68வது வயதில் மரித்தார்கள், 50 ஆண்டுகள் விதவையாகவே வாழ்நாளை கடத்தினார்கள் ஆயிஷா. இவரை ஒரு தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கனவிலும் நினைக்கமாட்டார்கள். [45] 

46. ”தற்காலிக திருமணம் (Temporary Marriage) ” என்ற சீர்கேட்டை அனுமதித்த முஹம்மது

திருமணத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, “திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது” என்று நாம் பொதுவாக சொல்லுவோம். ஆனால், முஹம்மதுவோ தற்காலிக திருமணம் என்ற பெயரில் ஒரு சீர்க்கேட்டை சட்டமாக அனுமதித்துள்ளார். அதாவது ஒரு மணி நேரம், அல்லது ஒரு நாள் அல்லது ஒரு மாதம் வரையில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வதை இவர் அனுமதித்துள்ளார். இதனை உலக மக்கள் விபச்சாரம் என்றுச் சொல்வார்கள். இதற்கு ஆதாரமாக குர்-ஆன் 5:87ம் வசனத்தையும் சொல்லியுள்ளார். இவ்வசனம் இதனை பரிசுத்தமான செயல் என்றும் கூறுகிறது. முஹம்மதுவோடு இருந்த மக்கள் இவரிடம் வந்து, எங்கள் மனைவிகள் தூரமாக இருக்கிறார்கள், நாங்கள் என்ன செய்ய என்று கேட்டபோது, தற்கால திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த செயலை இன்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று இது கேவலமான செயல் என்று எண்ணி சுன்னி முஸ்லிம்கள் பின்பற்றாவிட்டாலும், குர்-ஆன் 5:87 இன்னும் இரத்து செய்யப்படாமல் இருக்கிறது. விபச்சாரத்திற்கு வேறு ஒருபெயர் சூட்டிவிட்டால், அது நியாயமானதாக மாறிவிடுமா? இப்படிப்பட்ட மார்க்கத்தைக் கொண்டுவந்தவரை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு நல்ல நபி என்று நம்புவார்கள்? இது அறுவறுப்பான செயலாகும்.[46]

47. கல் முஸ்லிமுக்கு நண்பன் - முஸ்லிமுக்கு கல் உதவுமாம், யூதனை காட்டிக்கொடுக்குமாம்

இனவெறியை முஸ்லிம்களின் உள்ளங்களில் அளவில்லாமல் ஊற்றிவிட்டார் முஹம்மது. முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடாதவரை இறுதி நாள் வராதாம். எந்த அளவிற்கென்றால், கல்லின் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்துக்கொண்டு இருப்பானாம். அந்தக் கல் “முஸ்லிமே, இதோ என் பின்னே ஒரு யூதன் ஒளிந்துக்கொண்டு இருக்கிறான், அவனை கொன்றுவிடு” என்று கூறுமாம்.  இப்படி முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையே வெறுப்பை உண்டாக்கியவர் எப்படி பைபிளின் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருப்பார்? மேலும் கல் பேசுகிறது, யூதனைக் காட்டிக்கொடுக்கிறது என்று கட்டுக்கதைகளைச் சொல்லி, முஸ்லிம்களை குதூகலமாக்கியுள்ளார் முஹம்மது. மக்களிடையே சமாதானத்தை உண்டாக்காமல் வெறுப்பையும், சண்டை மனப்பான்மையையும் உண்டாக்கியவர் கள்ளத்தீர்க்கதரியாவார்.[47]

48. தாடிக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டு யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயம் இடுவதில்லையாம், எனவே அவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளும் விதமாக, முஸ்லிம்கள் தங்கள் தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயம் போட்டுக்கொள்ளும் படி முஹம்மது அறிவுரை தருகின்றார். இதனால் தான் இன்று நாம் பார்க்கும் போது அனேக இஸ்லாமியர்கள் தங்கள் தாடிகளுக்கு மறுதாணி போட்டுக்கொண்டு, சிவப்பாக தங்கள் தாடிகளையும், தலைமுடிகளையும் மாற்றிக்கொள்கிறார்கள். இதன் மூலம் நம்மோடு வாழும் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடந்துக்கொள்கிறோம் என்று மறைமுகமாக காட்டிக்கொள்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் ஆன்மீக தலைவர் இப்படியா மக்களுக்கு அறிவுரைச் சொல்வது? முஹம்மதுவின் இந்தச் செயல் மிகவும் கேவலமாக இருக்கிறது.  மக்களை அன்பினால் ஒன்று சேர்ப்பதை விட்டுவிட்டு, இப்படி வெறுப்புணர்வை உண்டாக்குவது ஒரு நபிக்கு தகுமா? இவரையா கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்பவேண்டும்? இப்படிப்பட்ட விவரங்களை தங்கள் இஸ்லாமிய நூல்களில் வைத்துக்கொண்டா முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றி சொல்ல முன்வருகிறார்கள்? முஸ்லிம்கள் தங்கள் தாடிகளை சிகப்பாக மாற்றிக்கொண்டு என்னத்தை சாதித்துவிட்டார்கள்? முஸ்லிம்களின் மனதில் விஷத்தை கக்கிவிட்டுச் சென்றுள்ளார் முஹம்மது இவர் நிச்சயமாக தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. [48]

49. சூனியம் வைக்கப்பட்டவர் எப்படி தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?

முஹம்மதுவிற்கு சூனியம் செய்யப்பட்டதாக அனேக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஒரு தீர்க்கதரிசிக்கு மற்றவர்கள் சூனியம் வைக்கமுடியுமா? பைபிளின் தரத்தில் பார்த்தால் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை. முஹம்மது உண்மையான இறைவனாகிய பைபிளின் யெகோவா தேவனின் தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், நிச்சயமாக தேவன் அவரை சூனியத்தில் அகப்படாமல் காப்பாற்றி இருந்திருப்பார். முஹம்மது ஒரு போலியான  தெய்வமாகிய அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாக இருந்தபடியினால்,அவருக்கு சூனியம் வைக்கமுடிந்தது. இப்படிப்பட்டவர் எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?[49]

50. நின்று தொழுதல், உட்கார்ந்து தொழுதல் மற்றும் படுத்துக்கொண்டு தொழுதல் - பலன்கள் என்ன?

முஹம்மதுவைப் பொறுத்தமட்டில், அல்லாஹ்வை தொழுவது என்பது முஸ்லிம் அல்லாஹ்விடம் செய்யும் வியாபாரமாகும். அல்லாஹ்வும் முஸ்லிமும் ஒப்பந்தம் செய்கிறார்கள், அதாவது நீ இப்படி தொழுதால், உனக்கு இத்தனை நன்மைகளை உன் வங்கி கணக்கில் சேர்ப்பேன், நீ வேறுமாதிரி தொழுதால், உன் வங்கிக்கணக்கில் குறைவான நன்மைகளைச் சேர்ப்பேன் என்று ஒரு வியாபாரம் நடக்கிறது. ஒரு முறை மூல வியாதியுள்ள ஒருவர் வந்து தான் உட்கார்ந்து தொழுவது பற்றி கேட்டார், அதற்கு முஹம்மது “நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு” என்று பதில் அளித்தார். இறைவனை தொழுவது என்பது இயேசு கூறியபடி,  முழு மனதுடன் மகிழ்ச்சியோடு செய்யும் ஒரு செயல் ஆகும். இதனை முழு மனதுடன் செய்யவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதற்கெல்லாம் இத்தனை நன்மைகள் என்று கணக்கு வழக்கு இல்லை. உண்மையான இறைவன் முஹம்மது சொன்னதுபோல செய்வாரா? தனக்கு வியாதி இருப்பதினால், அல்லாஹ்வை உட்கார்ந்துக்கொண்டு தொழும் முஸ்லிம் குறைவான நன்மைகளை பெறவேண்டுமா? இது அநியாயம் இல்லையா? இப்படியெல்லாம் ஒரு தீர்க்கதரிசி சொல்லமுடியுமா? ஓ.. முஹம்மது கள்ளத் தீர்க்கதரிசி என்பதற்கு ஆதாரங்கள் அடுக்கடுக்காக குவிகின்றனவே! இவரையா கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? நிச்சயமாக இல்லை, இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான், இதில் சந்தேகமில்லை.[50]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் “முஹம்மது ஜான்” குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[41] ஸஹீஹ் புகாரி 3583

ஸஹீஹ் புகாரி 3583. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி-ஸல்- அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள்.

மேலும், இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. Volume :4 Book :61

[42] ஸஹீஹ் புகாரி எண் 3292:

3292. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது. என கதாதா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59

[43] ஸஹீஹ் புகாரி எண்கள் 77, 6422, 189 & 196

77. 'நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்" என மஹ்மூது இப்னு ரபீவு(ரலி) கூறினார். Volume :1 Book :3

6422. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.

(நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (ம்ணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார். Volume :7 Book :81

189. தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்" என இப்னுஷிஹாப் அறிவித்தார்.

"நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்" என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள். Volume :1 Book :4

196. 'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4

[44] ஸஹீஹ் புகாரி எண்கள்: 2731 & 2732

. . . .அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்வார்கள். நபியவர்கள் உளூச் செய்யும்போது, அவர்கள் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் செல்வார்கள். . . . . . அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்து அளிக்கிற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரின் தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். . . 

. . . 

[45] ஸஹீஹ் புகாரி எண்கள் 5125, 7011, 7012 & 5078

5125. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். Volume :5 Book :67

[46] ஸஹீஹ் புகாரி எண் 5075, 5116, 5117, 5118 & 5119 & குர்-ஆன் 5:87

5075. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், '(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்: 

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 05:87) Volume :5 Book :67

குர்-ஆன் 5:87

5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

[47] ஸஹீஹ் புகாரி 2926 & 3593

2926. நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். 

நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், 'முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு" என்று கூறும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56

3593. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், கல் கூட, 'முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். Volume :4 Book :61

[48] ஸஹீஹ் புகாரி 3462 & 5899

3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். Volume :4 Book :60

5899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :77

[49] சஹீஹ் புகாரி 6063, 3175, 3268.  & 5765

6063. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்துவிட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள். 

அவர்கள் ஒரு நாள் என்னிடம், 'ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (நான்  உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), 'இந்த மனிதரின் நிலை என்ன?' என்று கேட்க, மற்றவர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்றுகேட்க, மற்றவர், 'லபீத் இப்னு அஃஸம்' என்று பதிலளித்தார். முதலாமவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு 'தர்வான்' (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். 

எனவே, நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), 'இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம்  மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது' என்று கூறினார்கள். 

நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 

'அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். நானோ (அதைப் பிரித்துக் காட்டுவதால்) மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன்' என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்த) லபீத் இப்னு அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான். Volume :6 Book :78

3175. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.  Volume :3 Book :58

3268. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள்,  அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம்  வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள். 

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.

5765. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள். 

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும். 

(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். 

இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். 

பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள். 

நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள். Volume :6 Book :76

[50] ஸஹீஹ் புகாரி எண்கள் 1115 & 1116

1115. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 

நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு" என்று விடையளித்தார்கள். Volume :1 Book :18

1116. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 

நான் மூல வியாதி உடையவனாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துக் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியின் பாதியே அவருக்கு உண்டு" என்று விடையளித்தார்கள். Volume :1 Book :18

பாகம் 6ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்