ஷைத்தானின் புண்ணியத்தினால் ஆயத்துல் குர்ஸியை முஸ்லிம்கள் (ஷைத்தானை துரத்த‌) ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்!

ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸி[1] என்ற ஒரு குர்ஆன் வசனத்தை முஸ்லிம்கள் ஓதுகிறார்கள்.

முஸ்லிம்களே! இந்த வசனத்தை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்குமென்று உங்களுக்கு கற்றுக் கொடுத்தவன் யார் என்று சிந்தித்து பார்த்து இருக்கின்றீர்களா? சரி, இப்போதாவது அதனை அறிந்துக்கொள்வோம். 

ஆயத்துல் குர்ஸியை ஓதினால், ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று  கற்றுக்கொடுத்தவன் யார்?

அல்லாஹ் கற்றுக்கொடுத்தானா  - இல்லை!

முஹம்மது கற்றுக்கொடுத்தாரா  - இல்லை! 

அப்படியானால் இதனை கற்றுக் கொடுத்தவர் யார்?

இதனை கற்றுக் கொடுத்தவன் ஷைத்தான் ஆவான்! ஆம் அவன் தான் கற்றுக்கொடுத்தான்.  மேலும் முஹம்மது அதனை அங்கீகரித்தும் இருக்கிறார் என்பதை அறியும் போது, மனது உண்மையாகவே வலிக்கிறது.

சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை படித்துப் பாருங்கள், அப்போது தான் உண்மை உங்களுக்கே புரியும்.

நூல்: புகாரி ஹதீஸ், எண்: 5010

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார் 

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும் கூறினார்கள். 35 

Volume :5 Book :66 (மேலும் பார்க்க புகாரி ஹதீஸ் எண்கள்: 2311 & 3275)

என்ன ஆச்சரியம்!

இந்த நிகழ்ச்சியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? 

ஷைத்தான், தன்னை எப்படி விரட்ட வேண்டும் என்று தானே முஸ்லிம்களுக்கு நேரடியாக‌ சொல்லிக் கொடுக்கின்றானா! இது எப்படி சாத்தியமாகும்? இதுவும் ஒரு உண்மையான நிகழ்ச்சி என்று நம்பும் அளவிற்கு  முஸ்லிம்கள் அறியாமையில் இருக்கிறார்களா?

ஒரு திருடனின் அறிவுரை:

இதனை கற்பனை செய்துப்பாருங்கள், அதாவது ஒரு  திருடன் அல்லது கொலைக்காரன், உங்களிடம் குழந்தைகள் விளையாடும் தண்ணீர் பாய்ச்சும் போலி துப்பாக்கியைக் கொடுத்து, என்னிடமிருந்து உங்களை காப்பாற்ற இந்த ஆயுதம் உதவும். இதனைக் கொண்டு என்னை சுட்டால், என்னால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. என்னை நம்புங்கள், நான் உண்மையைச் சொல்கிறேன். இதோ இந்த துப்பாக்கியை உங்கள் படுக்கையின் பக்கத்தில் வைத்துக்கொண்டு நீங்கள்  நிம்மதியாக தூங்கலாம். நான் வரும் போது, இதனைக் கொண்டு என்னை சுட்டால் போதும் என்று சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு திருடன் இப்படி உங்களிடம் சொன்னால், எப்படி இருக்கும் உங்களுக்கு? அதனை  நீங்கள் நம்புவீர்களா?

இதுமட்டுமல்ல, தன்னை எப்படி விரட்டமுடியும் என்று ஷைத்தான் கொடுத்த  ஆலோசனையை  (அல்லது குறுக்குவழியை)  அல்லாஹ்வின் இறைத்தூதரான முஹம்மது அங்கீகரித்தும் விட்டார், என்னே ஆச்சரியம்!

இக்கேள்விகளை சிந்தித்துப்பாருங்கள்: 

  1. தன்னை விரட்டும் வழிமுறைகளை  முஸ்லிம்களுக்கு ஏன் ஷைத்தான் கற்றுக்கொடுப்பான்?
  2. ஷைத்தான் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
  3. இப்படி ஷைத்தான் சொன்னான் என்று நம்புவது அறிவுடமையாக இருக்கின்றதா?

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? (இயேசு - மத்தேயு 12:26), 

முஹம்மது கூறிய விவரத்தில் உள்ள லாஜிக்கை பார்த்தீர்களா?

அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும் 

அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;' (புகாரி எண்: 5010)

இது என்ன ஆச்சர்யம்! ஒரு பெரும் பொய்யன், சொன்னது உண்மையா?

வேடிக்கையாக உள்ளதல்லவா? முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷைத்தானுக்காக வழக்காடும் வழக்கறிஞராகவும் இருக்கிறாரா என்ன? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

ஒருவனைப் பார்த்து, "நீ உலக மகா பொய்யன்" என்ற பட்டத்தை கொடுத்துவிட்ட பிறகு, "நீ சொன்னதும் உண்மையே" என்றுச் சொன்னால், இப்போது நாம் யாரை நொந்துக்கொள்வது? அந்த பொய்யனையா (ஷைத்தானையா) அல்லது அவனை அங்கீகரித்தவரையா (முஹம்மதுவையா)?

அடுத்ததாக, ஷைத்தான் கூறியதையும் கவனியுங்கள்:

அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். (நூல்: புகாரி ஹதீஸ், எண் 2311)

  1. அல்லாஹ் “இந்த‌  நன்மையைச் செய்வான்” என்ற முடிவு எடுக்க ஷைத்தானுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்? 
  2. ஷைத்தான் சொல்லிவிட்டானே என்பதற்காக, அதன் படி செய்ய அல்லாஹ்வால் முடியுமா? அல்லாஹ் ஷைத்தானுக்கு ஏதாவது கடமைப்பட்டுள்ளானா? 
  3. அல்லது ஷைத்தான் அல்லாஹ்வோடு சேர்த்து செயல்படும் கூட்டாளியா?

இந்த ஹதீஸ் முழுவதையும் படித்தால், இன்னும் பல தர்மசங்கடமான  கேள்விகள் எழும்புகின்றன, ஆனால், இதோடு என் கேள்விகளை முடித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம்களே, அடுத்த முறை நீங்கள் ஆயத்துல் குர்ஸியை ஓதும் போது, இதனை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், அது என்னவென்றால், இந்த  ஆயத்தை ஓதினால், ஷைத்தான் ஒன்றுமே உங்களை செய்யமுடியாது என்று உங்களுக்கு ஆலோசனை சொன்னவனே, அதே ஷைத்தான் தான். 

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஷைத்தான் உங்களை (முஸ்லிம்களை) தெளிவாக குழப்பி ஏமாற்றியுள்ளான். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவன் விரும்பினானோ, அதனைத் தான் நீங்கள் பல நூற்றாண்டுகளாக செய்துக்கொண்டு இருக்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ்!

அடிக்குறிப்புக்கள்:

1) ஆயத்துல் குர்ஸி என்பது, குர்‍ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 255வது வசனமாகும்.

2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்).

2) இந்த நிகழ்ச்சி பற்றி பதிவு செய்யப்பட்ட  ஸஹீஹ் புகாரி ஹதீஸ்கள்:

2311. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று கேட்டார்கள்.நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

Volume :2 Book :40

3275. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்' என்று கூறினார்கள். 

Volume :3 Book :59

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார் 

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும் கூறினார்கள். 35 Volume :5 Book :66